தீயாய் பரவும் பெண் விஏஓ-வின் பரபரப்பு ஆடியோ... யார் மீது குற்றம்?

x

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இறப்புச் சான்றிதழ் தொடர்பாக சமூக ஆர்வலர் மற்றும் விஏஓ இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேவிபட்டணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி... இவரது கணவர் ராஜிங்கராஜா இறந்து பல மாதங்கள் ஆன நிலையில், விஏஓ அன்பு செல்வியிடம் இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார். ஆனால் இறந்த இடத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அன்பு செல்வி இறப்பு சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளார். இது தொடர்பாக விஏஓவிடம் சமூக ஆர்வலர் கேட்டபோது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான ஆடியோ பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்