மின் கம்பி உரசி திடீரென தீப்பிடித்த லாரி.. அணைக்க அணைக்க விடாமல் எரிந்ததால் பரபரப்பு

x

தென்காசியில், தேங்காய் நார் ஏற்றிச்சென்ற லாரியில் எதிர்பாரா விதமாக மின் கம்பி உரசியதில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதைக் கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அருகில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி தீயை அணைக்க முயற்சித்தார். அப்போது அங்கு மின்சாரம் இல்லாததால், தீயானது தொடர்ந்து எரிய தொடங்கியது. மீண்டும் ஓட்டுனர் லாரியை அங்கிருந்து இயக்கி ஆளில்லாத இடத்தில் நிறுத்தியதை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஓட்டுனரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்