கடந்த 3ஆம் தேதி இரவு நடந்த பயங்கரம்... தற்போது வெளியான அதிர்ச்சி வீடியோ

x

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சாலையை கடக்கும் மூதாட்டி மீது ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முதலியார்பட்டி அருகே, கடந்த 3ஆம் தேதி இரவு மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மூதாட்டியை சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மீட்டனர். மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்றும் வரும் நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்