"ஆபாசம்".. ஜெராக்ஸ் கடை ஓனர் த*கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

x

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே, ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ஒருவரின் த*கொலை வழக்கில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகேயுள்ள சிலமலை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணராஜா. மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்த இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென தனது வீட்டிற்குள் வைத்து லட்சுமணராஜா தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமண ராஜாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற நிலையில், உடலை ஒப்படைக்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, லட்சுமண ராஜாவின் த*கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி போடி - தேவாரம் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சாலையே ஸ்தம்பித்துப் போனது.


Next Story

மேலும் செய்திகள்