அவமானத்தில் உயிரைவிட்ட இளைஞர் - வினோத மறியலில் இறங்கிய ஊர் மக்கள்

x

போடி அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, சாலைகளில் கட்டைகளை அடுக்கி மறியலில் ஈடுபட்ட மக்களால் பதற்றம் ஏற்பட்டது. சிலமலை கிராமத்தில் இ-சேவை மையம் நடத்தி வந்த லட்சுமண ராஜ் என்பவரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் கட்டைகளை அடுக்கி, அங்கேயே உணவு சமைத்து மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்