சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் புரோக்கர்கள்?

x

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பத்திரப்பதிவில் ஈடுபடும் நபர்கள், உரிய அங்கீகாரம் அல்லது அடையாள அட்டையுடன் உள்ளே சென்று வருவதற்கு நடவடிக்கை எடுத்து பத்திரப்பதிவுகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கீகாரம் பெறாத நபர்கள் தலையிடுவதால், பத்திரப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் அதிக தொகை வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்