பிரவசத்திற்கு பின் நிற்காத ரத்தக்கசிவு...பேச்சு மூச்சு இல்லாமல் நின்ற தாய் உயிர் - விலகாத மர்மம்

x

பிரவசத்திற்கு பின் நிற்காத ரத்தக்கசிவு...

பேச்சு மூச்சு இல்லாமல் நின்ற தாய் உயிர்

பிறந்த நொடியே அனாதையான குழந்தை

ஒரு மாதமாகியும் விலகாத மர்மம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்து 1 மாதம் ஆன பிறகும் உடற்கூறு ஆய்வறிக்கை வழங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரவசத்திற்கு பிறகு ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடுக்கோட்டையை சேர்ந்த ஜெயப்பிரியா கடந்த மாதம் 26 ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில் இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் ஆகியும் உடற்கூறாய்வறிக்கை வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழிப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்