மறுத்த போலீஸ்.. தேனி, ஆண்டிப்பட்டியில் பரபரப்பு

x

ஆண்டிப்பட்டியில், விநாயகர் சிலைகளில் ரசாயன கலவை பூசியிருப்பதாக கூறி சிலைகளை எடுத்து செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிலைகள் மூன்று மண்டபங்களில் இந்து அமைப்பினரால் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலைகளை எடுத்துச் செல்ல இந்து அமைப்பினர் முயன்ற போது, சிலைகளில் ரசாயன கலவை பூசியிருப்பதாக கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், ஆண்டிப்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்