பேருந்தை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்.. இருக்கையில் இருந்து பறந்த முதியவர்..! பயத்தில் அலறிய பயணிகள்

x

ஆண்டிபட்டி அருகே வேகத்தடையில் மின்னல் வேகத்தில் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த முதியவருக்கு மூக்கு உடைந்தது. தேனி மாவட்டம் ஏத்தக் கோவில் கிராமத்தில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை பாண்டியராஜ் என்பவர் ஓட்டினார். அவர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியதுடன், ஆண்டிப்பட்டி ரயில்வே கேட் அருகே உள்ள வேகத்தடையிலும் வேகத்தை குறைக்காமல் அந்தரத்தில் பறந்தபடி சென்றதால் பஸ்சில் இருந்த மேத்யூ என்ற முதியவர் முன் இருக்கை கம்பியில் மோதி அவருடைய மூக்கு உடைந்தது. இதேபோல சிறுவன் உள்பட மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை நேராக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பேருந்தின் இருக்கை மற்றும் பிரேக் சரியாக பராமரிக்கப்படவில்லை என ஓட்டுனர் தெரிவித்த நிலையில் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்