ஆடுகளை வேட்டையாடும் புலி - பீதியில் கிராம மக்கள்

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில், ஆடுகளை வேட்டையாடி வரும் புலியால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

முத்தாலம் பாறை அருகே மலை அடிவாரத்தில் உள்ளது, கருமலைசாஸ்தாபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மலை அடி வாரத்தில் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். திடீரென இந்த மலை அடி வாரத்தில் நடமாடும் புலி ஒன்று, கடந்த 10 நாட்களில் 15 ஆடுகளை வேட்டையாடியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், மாலை ஆறு மணிக்கு மேல் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுவதில்லை. இந்த பகுதியில் ஒரு அரசுப்பள்ளி மற்றும் ஒரு அங்கன்வாடி இருப்பதால், அசம்பாவிதம் நேரும் முன், புலியை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்