தமிழகத்தை அதிர வைத்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை..? - மருத்துவ பரிசோதனையில் பகீர்..

x

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் மாணவி ஒருவர், கல்லூரி செல்வதற்காக தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்கு சென்ற தன்னை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்னோவா காரில் கடத்தியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் இறக்கி விட்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட மகளிர் காவல்நிலையத்தினர், பின்னர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை முடிவில், பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியானது. மாணவி மன அழுத்தத்தில் இருந்ததின் காரணமாக பொய் புகார் அளித்துள்ளார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்