தந்தி செய்தி எதிரொலி - கிடப்பில் போடப்பட்ட பாலம் பணிகள் முடிப்பு | Theni

x

பெரியகுளம் அருகே கிடப்பில் போடப்பட்ட பாலத்தின் கட்டுமான பணிகள் தந்தி தொலைக்காட்சி செய்தியின் எதிரொலியாக முடிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் மஞ்சளார் அணைக்கு கீழ்ப்பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு பாலம் கட்டுமான பணி தொடங்கியது. 80 சவீதம் பணிகள் முடிவடைந்தநிலையில், கடந்த ஓராண்டாக இரு கரைகளும் இணைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து நமது தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி பாலத்தின் இரு கரைகளையும் இணைத்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்