இடி, மின்னலுடன் கொட்டிய மழை.. மழைநீருக்கு இரையான வீடுகள் - தத்தளிக்கும் மக்கள்..

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால் வரதராஜபுரம் கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அருகேயுள்ள கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்