நொடியில் வந்த மரணம்... யாருமே எதிர்பார்க்காத கொடூர சம்பவம்

x

நொடியில் வந்த மரணம்... யாருமே எதிர்பார்க்காத கொடூர சம்பவம்

ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, வருசநாடு அருகே வாய்க்கால்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். கட்டிட தொழிலாளியான இவர், கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில், கான்கிரீட் போடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஈரமான மரப்பலகையை மேலிருந்து கீழே இறக்கும்போது அது எதிர்பாராத விதமாக அருகே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது. அப்போது ஈரப்பலகை வழியாக தேவேந்திரன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்