17 நாட்களில் 7 கொள்ளை.. சுற்றி சுற்றி கைவரிசை காட்டிய மர்மகும்பல் - விழிபிதுங்கி நிற்கும் மக்கள்

x

17 நாட்களில் 7 கொள்ளை.. சுற்றி சுற்றி கைவரிசை காட்டிய மர்மகும்பல் - விழிபிதுங்கி நிற்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தொடர் கொள்ளை சம்பவங்களால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் - பார்வதி தம்பதியர், கோவையில் தொழில் செய்து வரும் நிலையில், க.புதுப்பட்டியில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் காம்பவன்டிற்குள், பார்வதியின் தாயார் பஞ்சவர்ணம் வசித்து வரும் நிலையில், தனது மகள் வீட்டில் எரியும் விளக்கை அணைக்கச் சென்றபோது நகை, பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதே பகுதியில், கடந்த 6ம் தேதி ராஜா, கார்த்திக் குகன், குமரப்பன் ஆகியோரது வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் பூட்டிக்கிடந்த மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்கள் குவியும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்