மக்களை கடித்து குதறிய வெறிநாய்... 10 பேருக்கு நேர்ந்த பரிதாப நிலை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..

x

ஈரோடு அருகே வெறிநாய் ஒன்று பொதுமக்களை விரட்டிச் சென்று கடித்ததில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சாலைப்புதூர், தளுவம்பாளையம் , பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் சுற்றிதிரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்களை அந்த நாய் திடீரென கடிக்க தொடங்கியது. இதில் சண்முகம், சுப்ரமணி, ரமேஷ், சோமசுந்தரம் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அந்த 10 பேரும் கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கொடுமுடி காவல்நிலைய போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வாகனத்தை எடுக்க முயன்ற நபரை வெறிநாய் கடிப்பது தொடர்பான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் உட்பட அனைவரையும் வெறிநாய் கடித்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்