காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி வெயில், மழை பாராமல் கர்ப்பிணி போராட்டம்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி 9-வது நாளாக கர்ப்பிணி பெண் போராட்டம் நடத்தி வருகிறார். வேலக்கவுண்டனூரை சேர்ந்த மோகன்ராஜ், பவித்ரா என்பவரை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பவித்ராவை மோகன்ராஜ் கைவிட்டு விட்டதால், கடந்த 23-ம் தேதி முதல் கணவர் வீட்டின் முன் அமர்ந்து பவித்ரா போராட்டம் நடத்தி வருகிறார். 9-ம் நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பவித்ரா, கணவரை தம்முடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என காவல் துறைக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்