மோதலை தடுக்க வந்த போலீஸை விரட்டி விரட்டி அடித்த வட மாநில குரூப் - அதிர்ச்சி வீடியோ

x

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காவலரை தாக்கிய 5 வட மாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணை நடத்த ரகுபதி என்ற காவலர் சென்றார். அப்போது, விசாரிக்கச் சென்ற காவலரை, வடமாநிலத்தவர்கள் சரமாரியாக தாக்கினர். இதன்பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், காவலர் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்