வயலில் மறைந்து இருந்த மின்கம்பி..! தொட்டவுடன் கண்ணை மூடிய விவசாயி..தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

x

புளியங்குடியை அடுத்த வெள்ளானைகோட்டை கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் விவசாயம் செய்து வருகிறார். வயலுக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர். இதேபோல் அவரது வீட்டின் அருகே உள்ள

குருசாமியும் வயலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இருவரும்

வயல் வெளியில் அறுந்து விழுந்து கிடந்த

மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதால்

உயிரிழந்து கிடந்தனர். தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரு உடல்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் குடும்பத்திற்கும் அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்