ஆய்வுக்கு வந்த கலெக்டர், நீதிபதி...திடீரென அதிகாரிகளை மிரளவிட்ட பெண் - வெளியான காட்சி

x

#kovai

ஆய்வுக்கு வந்த கலெக்டர், நீதிபதி...திடீரென அதிகாரிகளை மிரளவிட்ட பெண் - வெளியான காட்சி

கோவையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதியை, தீடீரென நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டவிரோதமாக செம்மண் எடுக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் திடீரென முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட அவர்கள், தனியார் ரிசார்ட் ஒன்று தங்களது வழித்தடத்தை அடைப்பதாகவும், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பதாகவும் குற்றம் சாட்டினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் திரும்ப சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்