கைதி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

x

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சிறைத்துறை டிஐஜி ராஜலெட்சுமி வீட்டில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அப்போது அவரது வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு சிறை காவலர்களுக்குச் சம்மன் அளித்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் பல அதிர்ச்சி தகவல்களைக் சிறைத்துறை காவலர்கள்

கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சிறைத்துறை டிஐஜி ராஜலெட்சுமிக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்த இருப்பதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்