நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்.. கண்ணீர் விட்டு கதறும் சக பெண்கள் | Thanthitv

x

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த செல்வி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அவசர சிகிச்சை பிரிவு மேல் மாடியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கீழே தவறி விழுந்தார். தனால் படுகாயமடைந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து அறிந்த, சக பெண் தொழிலாளர்கள் கதறி அழுதனர். பணியின்போது பெண் துப்புரவு பணியாளர் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்