மீண்டும் மெகா தேடுதல் பணி... ஒரு இன்ச் கூட விடாமல் அலசும் மக்கள்

x

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 420க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். ராணுவத்தின் முப்படை வீரர்களும் 10 நாள்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது தேடுதல் பணியை கடந்த 9ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டியிருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் பங்களிப்புடனான மெகா தேடுதல் பணி இன்று மீண்டும் நடைபெற்றது. தேடுதல் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை 9 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால், அதன் பிறகு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்