AC போட்டு தூங்கிய திருடன் - காவல் நிலையத்தில் மீண்டும் தூங்க வாய்ப்பு

x

வந்த வேலைய மறந்துட்டு.. உண்மையான வீட்டுக்காரனாவே மாறிட்டியேப்பா - AC போட்டு தூங்கிய திருடன் - காவல் நிலையத்தில் மீண்டும் தூங்க வாய்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் திருட வந்த வீட்டில் விருந்தாளியைப் போல் ஏசியைப் போட்டுக் கொண்டு குளுகுளுவென குட்டித் தூக்கம் போட்ட திருடனைப் போலீசார் கைது செய்தனர்... இந்திரா நகரில் மருத்துவர் சுனில் பாண்டே என்பவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடன் அறையில் ஏசி இருப்பதைக் கண்டு வந்த களைப்பில் ஏசியை போட்டு விட்டு அயர்ந்து தூங்கியுள்ளார்... அக்கம்பக்கத்தினர் கதவு உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் தகவலளித்துள்ளனர்... விரைந்து வந்த காவல்துறையினர் கையில் போனுடன் குளுகுளு ஏசியில் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த திருடனைக் கைவிலங்கு பூட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்... மதுபோதையில் திருடன் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்