கொடூரமாக கொல்லப்பட்ட கணவன் மனைவி - மதுரையை நடுங்க வைத்த மர்ம மரணம்

x

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வயதான தம்பதி, அழகு மற்றும் பாப்புரம்மாள். இவர்கள், மேலூர் அருகே கச்சிராயன்பட்டியில் தங்கி, தென்னை விளக்குமாறு வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி, அழகு, வெட்டுக்காயங்களுடனும், பாப்புரம்மாள், ரத்த வெள்ளத்தில் சடலமாகவும் கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து, கொட்டாம்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது, வழக்கானது ரெட்டை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்