தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் - மாணவிக்கு நேர்ந்த சோகம் - கொந்தளித்த உறவினர்கள்

x

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம்

குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா. 7- ம் வகுப்பு மாணவியான இவர், வீட்டில் தண்ணீர் காய வைப்பதற்காக ஹீட்டர் போட்ட போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டநிலையில், மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் ஆட்டோவில் ஏற்றி சென்றனர். குடியாத்தம் மருத்துவமனையில் மாணவி பலியானதால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்