கொட்டும் மழையில்.. மாணவர்களுக்கு நேர்ந்த கதி - கொந்தளித்த பெற்றோர்

x

கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் பள்ளியில், விளையாட்டு விழாவை பார்க்க மாணவ, மாணவிகளை மழையில் நனைந்தபடி அமர வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கோவையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில், விழா மேடைக்கு மட்டும் மேற்கூரையுடன் கூடிய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் கொட்டும் மழையில் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் சூழலில், இதுகுறித்து பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்