பார்வை இல்லாதவர்களுக்கு பிரத்யேக வாக்குப்பதிவு இயந்திரம்... +1 மாணவிகள் அசத்தல்

x

பார்வை இல்லாதவர்களுக்கு பிரத்யேக வாக்குப்பதிவு இயந்திரம்... +1 மாணவிகள் அசத்தல்

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1 படிக்கும் மாணவி ராஜேஸ்வரி, தன்னுடன் படிக்கும் மாணவிகளுடன் சேர்ந்து கண் பார்வையற்றோர் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது, கண் பார்வையற்றவர்கள் மற்றொருவரின் துணையோடு சென்று வாக்களித்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, பார்வையற்றவர்கள், தாங்களாகவே வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த இயந்திரத்தில் உள்ள பட்டனை பார்வையற்றவர்கள் தொடும்போது, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவரின் பெயர், ஹெட்போனில் உச்சரிக்கப்படும். இதனால் பார்வையற்றவர்கள் எளிதில் தங்களுக்கு விருப்பமான கட்சிக்கு எளிதில் வாக்களிக்கலாம் என்று அந்த மாணவிகள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்