சுடுகாட்டில் வைத்து சரமாரி வெட்டு - துடிக்க துடிக்க பறிபோன உயிர்

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. டூரிஸ்ட் வேன் உரிமையாளரான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மாடசாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சில நாள்களுக்கு முன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் கோபியை மாடசாமி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த கோபி... சம்பவத்தன்று இரவு மூப்பன்பட்டி சுடுகாடு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த மாடசாமியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் கோபியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்