சென்னை நீதிமன்ற வளாகத்தில் வன்முறை - 16 பேர் மீது பாய்ந்த வழக்கு... வெளியான பரபரப்பு காட்சி

x

சென்னை நீதிமன்ற வளாகத்தில் வன்முறை - 16 பேர் மீது பாய்ந்த வழக்கு... வெளியான பரபரப்பு காட்சி

சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் விஜயகுமாருக்கும், செந்தில்நாதன் என்பவருக்கும் இடையே போக்குவரத்து புலனாய்வு பிரிவு வாகன விபத்துகளை எடுத்து நடத்துவதில் பிரச்சினை இருந்துள்ளது. சம்பவத்தன்று எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியதுடன் நாற்காலிகளையும் அடித்து சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் செந்தில்நாதன், சக்திவேல் உள்பட 6 பேர் மீதும், வழக்கறிஞர் செந்தில்நாதன் கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார், விமல் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்