கமுக்கமாக...பதுங்கி இருந்தபெண் சாராய வியாபாரி - தொக்காக தூக்கிய காவல்துறை

x

கமுக்கமாக...பதுங்கி இருந்தபெண் சாராய வியாபாரி - தொக்காக தூக்கிய காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே, அக்கராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி சாமுண்டியை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் சாமுண்டியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தது தெரியவந்ததால், அங்கு விரைந்த தனிப்படை போலீசார், சாமுண்டியை கைது செய்து கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு லாரி டியூப்பில் 110 லிட்டர் சாராயத்தை சாமுண்டி பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை கொட்டி அழித்த போலீசார், சாமுண்டியை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்