`அப்பாவி மூஞ்சி..' `அடப்பாவி வேலை..' - சிக்கிய சீட்டிங் தாத்தா

x

அப்பாவி மூஞ்சி..' `அடப்பாவி வேலை..' - சிக்கிய சீட்டிங் தாத்தா

கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த 79 வயதான தங்கவேல் என்பவர் பொதுப்பணித் துறையில் பிளம்பராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஈரோட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகனுக்கு கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக

கூறி, 5 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு ஏமாற்றியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைப் பற்றி வழக்கு பதிவு செய்த ஈரோடு குற்றப் பிரிவு காவல் துறையினர், கோவையில் விசாரிக்க சென்றனர். கோவை வடவள்ளியில் இதே போன்று அரசு வேலை வாங்கி தருவதாக

கூறி, 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த தங்கவேலை, கோவை காவல் துறையினர் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது ஈரோட்டில் மோசடி செய்த

வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு கோடி ரூபாய் வரை இதே பாணியில் தங்கவேல் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்