"நான் அந்த நடிகையை பலாத்காரம் செய்தேனா?" - நடிகர் எடுத்த திடீர் முடிவு

x

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் சித்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.கேரள நடிகர் சங்கம், அம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது ஏற்கனவே இளம் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். திரைப்படத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த நடிகை, கேரள டிஜிபிக்கு இமெயில் மூலம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் திருவனந்தபுரம் மியூசியம் காவல்நிலைய போலீசார், நடிகர் சித்திக் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ​சித்திக் பாலியல் பலாத்காரம் செய்ததோடு மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்