ரகசிய தகவலால் - சிக்கிய விலை உயர்ந்த பொருள் - தென்காசி எம்.பி கொடுத்த பதில்

x

சேத்தூர் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக விருதுநகர் புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், சார்பு கோபால் தலைமையில் போலீசார் சேத்தூரில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமாரின் முன்னாள் கார் ஓட்டுநர் செல்லையா உள்பட 2 பேரை கைது செய்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் குறித்து எம்.பியிடம் கேட்ட போது, தேர்தல் முடிந்தவுடன் செல்லையாவை பணியைவிட்டு நிறுத்திவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்