வேலையை முடிக்க லஞ்சம் கேட்ட #VAO..அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் | Erode | Tamilnadu

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் கிராம நிர்வாக அலுவல ருத்ரசெல்வன் என்பவர் வாரிசு சான்று வழங்குவதற்காக ஆனந்தன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் படி, ரசாயனம் தடவப்பட்ட 45 ஆயிரம் ரூபாய் பணத்தை ருத்ரசெல்வனிடம், ஆனந்தன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ருத்ரசெல்வனை கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்