7ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்... உறைந்து போன திருச்சி

x

7ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்... உறைந்து போன திருச்சி

துவாக்குடி சேர்ந்த வடிவேலுவின் மகன் கிருஷ்ணகுமார், பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டிலிருந்த சிறுவன் கிருஷ்ணகுமார், துணிகளை அயர்ன் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அயர்ன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தான். வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். கிருஷ்ணகுமாரை பரிசோரித்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்