கைவைக்க கூடாத இடத்தில் திருடர்கள் கைவரிசை - ராமநாதபுரத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரம் கீழக்கரை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் ஒளிரும் சோலார் சிக்னல் கம்பங்களை கீழே சாய்த்து பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் சக்கரக்கோட்டை அருகே 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை கீழே சாய்த்து அதில் இருந்த பேட்டரிகளை மட்டும் திருடியுள்ளனர். ஒவ்வொரு மின்கம்பத்திலும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி இருந்ததாகத் தெரிகிறது. விபத்து பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் தரும் விதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பங்களை பேட்டரிகளைத் திருட சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்