ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி

x

நெல்லையில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லை-மேட்டுப்பாளையம் வாரந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்திற்கு திங்கட்கிழமை காலை சென்றடையும். நேற்றிரவு நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதனால் ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில், மற்றொரு ரயில் மூலம் தென்காசிக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த நெல்லை-மேட்டுப்பாளையம் வாரந்திர ரயிலில் ஏறினர்.


Next Story

மேலும் செய்திகள்