ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமி கோயில் திருவிழா - 1008 பால்குடம், 500 தீர்த்தக் குடம் - அமோக வழிபாடு

x

தென்காசி மாவட்டம் புளியங்குடி ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, 1008 பால்குடம் மற்றும் 500 தீர்த்தக் குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் தேதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து 1008 பால்குடம், 500 தீர்த்த குடம் மற்றும் மஞ்சள் குடம் எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

பின்ன​ர் தங்களது வேண்டுதல்களுக்கு காணிக்கைகளை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்