தாய்லாந்து வேலைக்கு சென்ற கணவர்.. திடீரென மாயமானது எப்படி..? "விபரீதமானதா Online விளம்பரம்?"

x

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற தமிழக இளைஞர் மாயமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த முத்துக்குமார் ஏஜெண்டுகள் மூலம் பல நாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் ஊருக்கு வந்த அவர் ஆன்லைன் விளம்பரம் மூலம் வேலை பார்க்க செல்வதாக கூறி கடந்த 22 ந்தேதி தாய்லாந்து சென்றுள்ளார். விமான நிலையத்திலிருந்து கடைசியாக பேசிய முத்துகுமார் பின்னர் மாயமாகிவிட்டதாக அவரது மனைவி சுந்தரி மற்றும் சகோதரர் தளவாய் சுந்தரமும் தெரிவித்துள்ளர். முத்துகுமாரை

கண்டுபிடித்து சொந்த ஊர் அழைத்து வர அரசு நடவடிக்கை

எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்