தங்ககுடத்தில் புனித நீர் - களைகட்டிய ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் தாயாருக்கு திருமஞ்சனம்

x

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் ரெங்க நாச்சியார் தாயாருக்கு இன்று ஆனி திருமஞ்சனம் வைபவம் நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்திற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோயில் யானை ஆண்டாள் மீது வைத்தும், வெள்ளிக் குடங்களில் நிரப்பபட்ட புனித நீர் பட்டாச்சாரியார்களாலும் சுமந்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாயாருக்கு சாற்றப்பட்டிருக்கும் வஸ்திரங்களை களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு மறுபடியும் புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்