20 ஆண்டுகளாக சிறையில் இருந்து கைதி - வெளியே வந்தவுடன்.. செய்த நெகிழ்ச்சி சம்பவம்

x

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் தனபால்... கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் இவர், தனது தந்தையின் உடல்நிலை சரி இல்லாததால் பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் பத்தாவது முறையாக கைதி தனபால் ரத்த தானம் செய்துள்ளார். இதற்கான பாராட்டுச் சான்றிதழையும் பெற்றுள்ள இவர், சிறையில் தான் வேலை பார்த்து கிடைத்த இரண்டு மாத சம்பளத்தை, ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்திற்கு வழங்கியுள்ளார். கைதி தனபாலின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்