ஆதரவற்ற சிறார்களை உற்சாகப்படுத்திய... ஸ்ரீமுருகன் டிராவல்ஸ் ஏஜென்சி

x

ஆதரவற்ற சிறார்களை உற்சாகப்படுத்திய... ஸ்ரீமுருகன் டிராவல்ஸ் ஏஜென்சி

மதுரையில் உலக சுற்றுலா தினத்தை ஒட்டி ஆதரவற்ற சிறார்களை ஸ்ரீமுருகன் டிராவல்ஸ் சுற்றுலா நிறுவனமும் மாவட்ட சுற்றுலாத் துறையும் இணைந்து சுற்றுலா அழைத்து சென்றது. மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி நினைவு அருங்காட்சியகம், ராஜாஜி பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறார்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

காந்தி நினைவு அருங்காட்சியத்தில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் சுற்றுலா நிறுவனத்தின் இந்த ஏற்பாடு, சிறார்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி பாலமுருகனும் பங்கேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்