உதவித்தொகை வழங்கும் விழா... காலதாமதத்தால் அலுத்துபோன மாணவர்கள்

x

பா.ஜ.க. நிர்வாகி சார்பாக நடந்த கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவுக்கு மத்திய நிதி அமைச்சர் வராததால் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மாநில செயலாளர் வினோஜ் செல்வம் ஏற்பாட்டில் 1000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உதவித்தொகைகளை வழங்குவதாக அறிவிக்கபட்டிருந்த நிலையில், அமைச்சர் வராததால் இரவு 8 மணி வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இடையில் 4 பேருக்கு மட்டும் உதவித்தொகை கொடுத்தநிலையில், தொடர்ந்து ஒவ்வொருவராக பேச தொடங்கினர். கடைசியாக பொறுப்பாளர்களிடமே உதவித்தொகையை கொடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், மாணவர்களும், பெற்றோரும் அதிருப்தி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்