`தமிழகத்தில் மேலும் 2 இடங்களில்..' - வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்க அமைக்க முதல்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்காக, வரைபட தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது.
Next Story