இரவோடு..இரவாக.. பள்ளியை இடித்த நிர்வாகி - வெளியான பரபரப்பு பின்னணி

x

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி கிராமத்தில் சரஸ்வதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 15 மாணவர்கள் படித்து வரும் நிலையில் பள்ளியின் நிர்வாகியும், தலைமை ஆசிரியருமான ரகுபதி மற்றும் ஆசிரியர் கோதண்டபாணி ஆகிய இருவரும் பள்ளியில் பணியாற்றி வந்தனர். கடந்த மே மாதம் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு டீ.சி (TC) யை கொடுத்த தலைமை ஆசிரியர் பள்ளியை தற்காலிகமாக மூடுவதாக கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து, பள்ளியை பூட்டிவிட்டு தலைமை ஆசிரியர் ரகுபதி ஓய்வு பெற்று விட்டார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மாவட்ட ஆட்சியர் பூட்டி கிடந்த பள்ளியின் பூட்டை உடைத்து திறந்து செயல்பட வைத்தார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகி ரகுபதி பள்ளியின் ஓட்டு கட்டிடத்தை ஜேசிபி கொண்டு இடித்து சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் பள்ளி நிர்வாகி ரகுபதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்