தமிழகத்தை மிரட்ட காத்திருக்கும் மழை - 25,26,27ம் தேதிகளில் - சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்

x

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 25ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுதினமும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில், இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்