"என் மனைவிக்கும் உனக்கும் கள்ள தொடர்பா?"குடித்து விட்டு எதிர்வீட்டு காரரிடம் செய்த ரகளை | Chennai

x

சென்னை பெரம்பூர் கார்ப்பரேஷன் லைன் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடசாமி. இவரது எதிர் வீட்டில் வசித்து வருபவர் துளசிய்யா. வாட்ச்மேன் வேலைக்கு சென்று வரும் இவர், அடிக்கடி தனது மனைவி மீது சந்தேகப்பட்டு எதிர் வீட்டில் வசிக்கும் வெங்கடசாமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் துளசிய்யா குடிபோதையில் எதிர்வீட்டில் வசிக்கும் வெங்கடசாமியிடம் சென்று எனது மனைவிக்கும் உனக்கும் கள்ள தொடர்பு உள்ளதா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடசாமி மார்பில் ஓங்கி குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த திருவிக நகர் போலீசார் துளசிய்யா மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்