கெமிஸ்ட்ரி லேப் ஆக மாறிய பெட்ரோல் பங்க் - பல்பு வாங்கிய ஊழியர்கள்

x

கரூர் பாலம்மாள்புரத்தில் செயல்படும் பெட்ரோல் பங்க்கில், நாமக்கல்லை சேர்ந்த ராதா என்பவர் 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். அங்கிருந்து சிறிது தூரத்திலேயே இருசக்கர வாகனம் நின்ற நிலையில், பழுது நீக்கும் கடையில் பெட்ரோலில் தண்ணீர் கலந்ததால் வாகனம் நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பெட்ரோலை கேனில் எடுத்து கொண்டு, பங்க்கிற்கு வந்த வாடிக்கையாளர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, மீண்டும் ஒரு கேனில் பெட்ரோல் பிடித்த ஊழியர்கள், இரண்டு கேனில் உள்ள பெட்ரோலையும் ஆய்வு செய்துள்ளனர். இதில் இரு கேனிலிருந்த பெட்ரோலின் அடர்த்தியும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. இதனால் வாகனத்தில் பிரச்சனை இருக்கும் என கூறி ஊழியர்கள் வாடிக்கையாளரை அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்