"கணக்கு காட்டுங்க..."ஒன்று கூடிய 9 கவுன்சிலர்கள் மோதலில் முடிந்த கூட்டம்

x

குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில், செயல் அலுவலரிடம் கணக்கு கேட்ட தலைவரிடம், இரண்டரை ஆண்டுகள் கணக்குகளை கேட்டு கவுன்சிலர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருராட்சி செயல் அலுவலர் சரவணராஜாவுக்கும், தலைவர் பங்கஜத்திற்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், 2 மாத‌த்திற்கான கணக்கை காட்டுமாறு செயல் அலுவலரிடம் பேருராட்சி தலைவர் பங்கஜம் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த 9 கவுன்சிலர்கள், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கான கணக்குகளை காட்டுமாறு தலைவரிடம் கேட்டு வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்